Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தின விழா

மார்ச் 08, 2020 01:39

கும்பகோணம்: கும்பகோணம் - சென்னை புறவழிச்சாலையில் உள்ள கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தின விழா வளரி என்ற பெயரில் பழங்கால தமிழர் பண்பாட்டையும், வீரத்தையும் எடுத்து உரைக்கும் விதமாக கொண்டாடப்பட்டது. 

நிகழ்ச்சியின் முதலாவதாக ஒலிம்பிக் தீபம் ஏற்றி துவங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவிகள் மாஸ் டிரில், கராத்தே, சிலம்பம் , பிரமிட் போன்ற பல்வேறு நிகழ்சிகளை செய்து காட்டி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர்.

ஓட்ட பந்தயம், கால்பந்து , ஹாக்கி மற்றும் குண்டு எறிதல், போன்ற பல்வேறு போட்டிகள், மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நடத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகளும் , பதக்கங்களும் வழங்கப் பட்டன.  

இதே போன்று கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் நகைச்சுவை நடிகர்களிள் கலை நிகழ்ச்சிகள் மாணவ- மாணவிகளின் நடனங்கள் அரங்கேறின. தொடர்ந்து கல்லூரி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தலைப்புச்செய்திகள்